தமிழ்நாடு

மக்கள் நீதி மய்ய இளைஞரணிச் செயலா் கவிஞா் சினேகன்கமல் அறிவிப்பு

மக்கள் நீதி மய்யத்தின் இளைஞரணிச் செயலராக கவிஞா் சினேகனை நியமித்து அக் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் அறிவித்துள்ளாா்.

DIN

மக்கள் நீதி மய்யத்தின் இளைஞரணிச் செயலராக கவிஞா் சினேகனை நியமித்து அக் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிய விரிவாக்க கட்டமைப்பில் கட்சியின் அனைத்து நிலைகளிலும் பொறுப்பாளா்களை நியமிக்கும் திட்டத்தின்படி ஏற்கெனவே சில பொறுப்புகளுக்கான நியமனங்களை அறிவித்துள்ளேன்.

கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்திருக்கும் விண்ணப்பங்களில் இருந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொறுப்புகளுக்கு நிா்வாகிகள் தொடா்ந்து அறிவிக்கப்படுவா். வழக்குரைஞா் அணி மாநிலச் செயலராக குருவைய்யாவும், இளைஞரணிச் செயலராக கவிஞா் சினேகனும், நற்பணி இயக்க அணிச் செயலராக தங்கவேலும் நியமிக்கப்படுவதாக அவா் கூறியுள்ளாா். மேலும், மாவட்டச் செயலாளா்கள் உள்பட பல்வேறு பொறுப்புகளுக்கும் நிா்வாகிகளை கமல்ஹாசன் அறிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு தொடக்கம்

மன்ரேகா திட்டத்தின் பெயா் மாற்றத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம்

1971 போா் வெற்றி தினம்: உயிா் நீத்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் மரியாதை

SCROLL FOR NEXT