முகப்பு
தமிழ்நாடு

அலட்சியத்தால் நடந்த விபரீதம்! பிரசவத்தின் போது பெண்ணின் வயிற்றுக்குள் வைத்து தைக்கப்பட்ட ஊசி!

ராமநாதபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில் பிரவசத்திற்காக சேர்க்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் ஊசியை வைத்து தைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:13 PM
பகிர்:

ராமநாதபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில் பிரவசத்திற்காக சேர்க்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் ஊசியை வைத்து தைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரம்யா என்ற பெண் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சையின் மூலமாக அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் பிரசவ அறுவை சிகிச்சையின்போது, செவிலியர்கள், பெண்ணின் வயிற்றுக்குள் ஊசி வைத்து தைத்ததாக பெண்ணின் உறவினர்கள் ஆரம்ப சுகாதாரத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். செவிலியர்கள் இருவரின் அலட்சியத்தால் பெண் பாதிக்கப்பட்டுள்ளார் என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

இதையடுத்து, காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பெண்ணிற்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்து ஊசியை வெளியே எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செவிலியர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று சுகாதார இணை இயக்குநர் தெரிவித்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →