doctors strike 
தமிழ்நாடு

உடனடியாக பணிக்குத் திரும்புக.. இல்லையென்றால்..? அரசு மருத்துவர்களுக்கு சுகாதாரத் துறை உத்தரவு

தொடர்ந்து 6வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் அரசு மருத்துவர்கள் அனைவரும் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

DIN


சென்னை: தொடர்ந்து 6வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் அரசு மருத்துவர்கள் அனைவரும் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5 நாட்களாக அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

வேலை நிறுத்தப் போராட்டம் இன்று 6வது நாளை எட்டியுள்ள நிலையில், அரசு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் அனைவரும் வேலை நிறுத்தத்தை கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. 

வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு நாளைக்குள் பணிக்குத் திரும்பாவிட்டால், போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் பணியிடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டு, மருத்துவர்கள் மீது பிரேக் இன் சர்வீஸ் நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு வேளை பிரேக் இன் சர்வீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டால் அரசு மருத்துவர்கள் பணி மூப்பை இழப்பார்கள்.

அதேப்போல, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மருத்துவப் பட்ட மேற்படிப்பு மாணவர்கள், பயிற்சிக்குத் திரும்பத் தவறினால், நன்னடத்தை சான்று கிடையாது எனவும் மருத்துவக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தரை மேல்... அதிதி ராவ் ஹைதரி!

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறும் நபர்கள் யார்?

காலை இளங்காற்று... பிரணிதா சுபாஷ்!

ஒரு வார இடைவெளிக்குப் பின் சென்னையில் திடீர் கனமழை: வெய்யிலின் தாக்கம் குறைந்தது!

ரியல் எஸ்டேட், பொதுத்துறை வங்கி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 40 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

SCROLL FOR NEXT