தமிழ்நாடு

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: இந்த பட்டியலில் உங்கள் ஊர் இருக்கிறதா?

DIN


சென்னை: தமிழகத்தில் கடலூர், மதுரை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், வெப்பச் சலனம் மற்றும் வட தமிழகத்தின் வளி மண்டலத்தில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்துக்கு ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் கடலூர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, அரியலூர், ராமநாதபுரம் உட்பட 15 மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்யலாம்.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்யலாம்.

கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை அதிகபட்சமாக அரியலூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியில் 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT