சென்னை: காலாவதியான ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை குறைத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை ஒருவரது ஓட்டுநர் உரிமம் காலாவதியாகி விட்டால் அதை புதுப்பிப்பதற்கு ஐந்து ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் காலாவதியான ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை குறைத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி கால அவகாசமானது ஐந்து ஆண்டுகளிலிருந்து ஓராண்டாக குறைக்கப்படுகிறது. புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி ஓராண்டிற்குள் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்காவிட்டால், மீண்டும் புதிதாக உரிமத்திற்கு விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.