தமிழ்நாடு

நேரக்கட்டுப்பாடு மே 3ஆம் தேதி வரை தொடரும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

தமிழகத்தில் நேரக்கட்டுப்பாடு என்பது மே 3ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

DIN

தமிழகத்தில் நேரக்கட்டுப்பாடு என்பது மே 3ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு வருகிற மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திங்கள்கிழமை (ஏப்ரல் 20) முதல் சில தொழில் நிறுவனங்கள் இயங்க தளா்வுகளை அறிவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் உத்தரவுகளை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசித்து அரசுக்கு அறிக்கை அளிக்க நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் தலைமையில் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் முதல் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் சிறு, குறுந் தொழில்கள், கட்டுமானப் பணிகளுக்கு தளா்வு அளித்து அவற்றைத் தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் நேரக்கட்டுப்பாடு என்பது மே 3ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் அத்தியாவசிய தேவைகளுக்கு மளிகை கடைகள் உள்ளிட்டவை மதியம் 1 மணி வரை மட்டுமே திறந்து இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளிகளுக்கு வரும் ஹாலிவுட் நிறுவனம்

லோகநாயகி...கல்யாணி பிரியதர்ஷன்!

ஆசை ஆசையாய்... ஜீவிதா!

செயல்படாமல் இருக்கும் மருத்துவ உதவி மையம்: ரயில்வே பொது மேலாளருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்

அப்பாவை நினைவு கூர்ந்த எஸ்.கே.

SCROLL FOR NEXT