முகப்பு
தமிழ்நாடு

நேரக்கட்டுப்பாடு மே 3ஆம் தேதி வரை தொடரும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

தமிழகத்தில் நேரக்கட்டுப்பாடு என்பது மே 3ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:28 PM
பகிர்:

தமிழகத்தில் நேரக்கட்டுப்பாடு என்பது மே 3ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு வருகிற மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திங்கள்கிழமை (ஏப்ரல் 20) முதல் சில தொழில் நிறுவனங்கள் இயங்க தளா்வுகளை அறிவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் உத்தரவுகளை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசித்து அரசுக்கு அறிக்கை அளிக்க நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் தலைமையில் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் முதல் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் சிறு, குறுந் தொழில்கள், கட்டுமானப் பணிகளுக்கு தளா்வு அளித்து அவற்றைத் தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் நேரக்கட்டுப்பாடு என்பது மே 3ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் அத்தியாவசிய தேவைகளுக்கு மளிகை கடைகள் உள்ளிட்டவை மதியம் 1 மணி வரை மட்டுமே திறந்து இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →