விழுப்புரத்தில் திடீர் கூட்ட நெரிசல்: காவல்துறையினர், அதிகாரிகள் தவிப்பு
விழுப்புரத்தில் நான்கு கடையடைப்புக்கு பின்னர் சனிக்கிழமை கடைகள் திறக்கப்பட்டதும் சமூக இடைவெளி கடைபிடிக்க முடியாத அளவுக்கு ஏராளமான
விழுப்புரத்தில் நான்கு கடையடைப்புக்கு பின்னர் சனிக்கிழமை கடைகள் திறக்கப்பட்டதும் சமூக இடைவெளி கடைபிடிக்க முடியாத அளவுக்கு ஏராளமான பொதுமக்கள் கடைகளுக்கு திரண்டிருந்ததால் காவல்துறையினர் திணறினர்.
விழுப்புரத்தில் வியாபாரிகள் சங்கம் சார்பில் திடீரென நான்கு நாள் கடையடைப்பும், மூன்று நாள் கடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி கடையடைப்பு முடிந்து, சனிக்கிழமை கடை திறக்கப்பட்டது.
இந்த திடீர் நடவடிக்கையால், விழுப்புரத்தில் இன்று ஏராளமான பொதுமக்கள் நேரு வீதி, காந்தி வீதி, பாகர்ஷா வீதி சந்தைகளில், கடைகளுக்கு திரண்டிருந்தனர்.
சமூக இடைவெளி கடைபிடிக்க முடியாத அளவுக்கு ஏராளமான கூட்டம் திரண்டு இருந்ததால் போலீஸார் திணறினர்.
தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர். பின்னர் கூட்டத்தை கட்டுப்படுத்துமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டனர்.
இதனால் ஏற்கெனவே இருந்த நடைமுறைப்படி அத்தியாவசியப் பொருள்ககளை வாங்குவதற்கான கடைகள் தினசரி குறிப்பிட்ட நேரத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.