கோயம்பேடு பழச்சந்தை மற்றும் மலர் அங்காடிகள் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் மறுஉத்தரவு வரும்வரை மாதவரத்திற்கு மாற்றப்படுவதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
காய்கறிக் கடைகள் வழக்கம்போல் கோயம்பேட்டில் செயல்படும். ஆனால், கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனை மட்டுமே நடைபெறும். அதிகாலை முதல் காலை 7.30 மணி வரை மட்டுமே வியாபாரிகள் காய்கறிகள் வாங்க அனுமதிக்கப்படுவர். பொதுமக்கள் வருவதற்கு(சில்லறை விற்பனை) முழுமையாகத் தடை விதிக்கப்படுகிறது.
காய்கறிகளை ஏற்றி வரும் வெளிமாநில/ வெளிமாவட்ட வாகனங்கள் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே கோயம்பேடு சந்தைக்குள் அனுமதிக்கப்படும்.
கோயம்பேடு வியாபாரிகள் மூவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் சிஎம்டிஏ நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.