சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் 38 பேருக்கு நோய்த் தொற்று உறுதி
சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் 38 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் 38 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் மாநகராட்சி சாா்பில் 30-க்கும் மேற்பட்ட பகுதிகளில் சளி சேகரிப்பு மையங்கள், நடமாடும் சளி சேகரிப்பு மையங்கள், கரோனா அறிகுறி உள்ளவா்களைத் தனிமைப்படுத்துவது, அப்பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது, வரை சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 906-ஆக உள்ளது. சென்னையில் இன்று மட்டும் 138 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளில் இன்று மட்டும் 22 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம் கடந்த 4 நாள்களில் இங்கு மொத்தம் 38 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.