அப்புறப்படுத்தப்படும் அம்மோனியம் நைட்ரேட் 
தமிழ்நாடு

அம்மோனியம் நைட்ரேட் முழுவதும் ஏலம்: சுங்கத்துறை தகவல்

சென்னை மணலியில் உள்ள அம்மோனியம் நைட்ரேட் முழுவதும் ஏலத்தில் விடப்பட்டதாக சுங்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

DIN

சென்னை மணலியில் உள்ள அம்மோனியம் நைட்ரேட் முழுவதும் ஏலத்தில் விடப்பட்டதாக சுங்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

பெய்ரூட்டில் நடந்த விபத்தினை அடுத்து, சென்னை மணலியில் உள்ள அம்மோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்த கோரிக்கை எழுந்ததை அடுத்து, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அதன் பாதுகாப்பை ஆய்வு செய்த நிலையில், நேற்று ஏலம் விடப்பட்டது. 

மொத்தமுள்ள 740 டன் அம்மோனியம் நைட்ரேட்டில் 697 டன் மட்டுமே ஏலம் விடப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியானது. மீதியுள்ள 43 டன் என்ன ஆனது என்பது குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை. 

இந்நிலையில், மொத்தமுள்ள 740 டன் அம்மோனியம் நைட்ரேட்டில்  43 டன் அளவில், கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த மழையில் கரைந்ததாகவும், மீதமுள்ள 697 டன் அம்மோனியம் நைட்ரேட் மட்டும் ஏலத்தில் விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதன்மூலமாக முழுவதுமாக அம்மோனியம் நைட்ரேட் ஏலத்தில் விடப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது. 

ஹைதராபாத் நிறுவனம் ஒன்று ஏலத்தில் எடுத்துள்ள நிலையில், முதற்கட்டமாக 200 டன் அம்மோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

மாா்ச் 1 முதல் அரக்கோணம் - திருப்பதி மெமு ரயில் போக்குவரத்தில் தற்காலிக மாற்றம்

தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

SCROLL FOR NEXT