சென்னையில் கரோனா சிகிச்சை பெறும் உறவினர்களின் நிலை அறிய உதவி எண்கள்
சென்னையில் கரோனா பாதித்து மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வரும் உறவினர்களின் நிலை அறிய உதவி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
சென்னையில் கரோனா பாதித்து மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வரும் உறவினர்களின் நிலை அறிய உதவி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இது குறித்து சென்னை மாநகராட்சி தெரிவித்திருப்பதாவது, பெருநகர சென்னை மாநகராட்சி கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களுக்கு உதவும் விதமாக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பொதுமக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள தங்கள் உறவினர்களின் உடல்நல விவரங்கள் மற்றும் பிற தகவல்களை பெற கோவிட் உதவி மையங்கள் 4 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த உதவி மையங்களின் தொடர்பு எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .
பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆணையாளர் கோ. பிரகாஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.