சென்னைப் பல்கலைக்கழக துணை வேந்தராக கௌரி நியமனம்
சென்னைப் பல்கலைக்கழக துணை வேந்தராக கௌரியை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.
சென்னைப் பல்கலைக்கழக துணை வேந்தராக கௌரியை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.
நியமிக்கப்படும் நாளில் இருந்து 3 ஆண்டுகளுக்கு சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக கௌரி செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கௌரி, அண்ணா பல்கலைக்கழக பதிவாளராகவும், பேராசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளத்துறை பல்கலைக்கழக துணைவேந்தராக சுகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.