விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக மேட்டுப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம்
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மேட்டுப்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மேட்டுப்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மேட்டுப்பாளையம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் யு.ஆர். பழனிசாமி தலைமை தாங்கினார். துணை செயலாளர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் செல்வம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற செயலாளர் மன்சூர் மற்றும் ராமதாஸ் வெள்ளிங்கிரி, ரங்கசாமி, மனோகரன், வி. வெள்ளிங்கிரி, ஜீவா உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.