முகப்பு
தமிழ்நாடு

மதுரையில் திமுக கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி மதுரையில் திமுகவினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:02 PM
மதுரையில் திமுக கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்
பகிர்:

மதுரை: வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி மதுரையில் திமுகவினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுரை மாநகர்  வடக்கு , தெற்கு மாவட்ட திமுக  சார்பில் அண்ணா நகர் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் பொன்.முத்துராமலிங்கம், கோ.தளபதி ஆகியோர் தலைமை வகித்தனர். நெல் 
நாற்றுகள் மற்றும் ஏர் கலப்பையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  
 
திமுக பொறுப்புக் குழு உறுப்பினர்கள் வேலுச்சாமி, குழந்தைவேலு, பழனிச்சாமி, பொன். சேது, தமிழரசி, ஜெயராம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில்  மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பொன் முத்துராமலிங்கம் பேசியது: 
மத்திய அரசு  வேளாண் சட்டத்தை அமல்படுத்திய அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். மேலும் தமிழக சட்டப்பேரவையில் இந்த சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். தன்னை விவசாயி என்று கூறிக்கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளுக்கு எதிரான சட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பது ஏன் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →