தமிழகம், புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில்,
வடகிழக்கு பருவ காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
அடுத்த 48 (10.12.20) மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்
காயல்பட்டினம் 7 செ.மீ மழையும், பெரியனைக்கென்பாளையம், கோத்தகிரி, வட்டணம், குன்னூர் தலா 5 செ.மீ மழையும், சோலையார், காரியாபட்டி, சோழிங்கநல்லூர் தலா 4 செ.மீ மழையும், கோபிசெட்டிபாளையம், உதகமண்டலம், தேக்கடி, சூளகிரி, ஆத்தூர், ஹிந்துஸ்தான் பல்கலை, வாலாஜா, காஞ்சிபுரம், ஸ்ரீமுஷ்ணம் தலா 3 செ.மீ மழையும் பெய்துள்ளது.