புதுச்சேரியில் ஜன. 4 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு
புதுச்சேரியில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், ஜனவரி 4 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், ஜனவரி 4-ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் ஏற்கனவே 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், ஜனவரி 4-ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
இதையும் படிக்கலாமே.. பாகிஸ்தானிலிருந்து திரும்பி 5 ஆண்டுகளாகியும் பெற்றோரை தேடிக்கொண்டிருக்கும் பெண்
இது குறித்து பேரவையில் புதுச்சேரி கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது, கரோனாவால் மூடப்பட்டு கிடக்கும் பள்ளிகள் ஜனவரி 4 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும். அன்றிலிருந்து 1ம் வகுப்பு முதல் அனைத்து வகுப்பினருக்கும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பள்ளிகள் செயல்படும்.
ஜனவரி 18-ம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் வழக்கமான நேரத்தில் முழுமையாக செயல்படத் தொடங்கும். அதாவது பள்ளிகள் காலை முதல் மாலை வரை செயல்படும் என்று அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.