முகப்பு
தமிழ்நாடு

சென்னை மதுரவாயல் பாலத்தில் சிக்கிய லாரி மீட்பு

சென்னை மதுரவாயல் பகுதியில் பாலத்தின் அடியில் சிக்கிய கண்டெய்னர் லாரியை அகற்றும் பணியின் போது எதிர்பாராத விதமாக லாரியில் தீப்பிடித்தது. தொடர்ந்து லாரியை பாலத்தில் இருந்து மீட்புப் படையினர் வெளியே மீட்ட

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
கோப்பிலிருந்து..
பகிர்:


சென்னை: சென்னை மதுரவாயல் பகுதியில் பாலத்தின் அடியில் சிக்கிய கண்டெய்னர் லாரியை அகற்றும் பணியின் போது எதிர்பாராத விதமாக லாரியில் தீப்பிடித்தது. தொடர்ந்து லாரியை பாலத்தில் இருந்து மீட்புப் படையினர் வெளியே மீட்டனர்.

மிகப்பெரிய கண்டெய்னர் லாரியில் மின்மாற்றி ஏற்றப்பட்டு சாலையில் வந்து கொண்டிருந்த போது, சென்னை மதுரவாயல் பாலத்தின் அடியில் லாரி சிக்கிக் கொண்டது.

இதனால் அப்பகுதியில் காலை முதலே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கண்டெய்னர் லாரியை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

லாரியை அப்பகுதியில் இருந்து அகற்ற, பாலத்தின் அடியில் சிக்கிக் கொண்ட மின் மாற்றியின் மேல்பகுதியை வெல்டிங் மூலம் குறைக்கும் போது, எதிர்பாராத விதமாக மின்மாற்றி தீப்பிடித்து எரிந்தது. இதனால் நிலைமை விபரீதமானது. எனினும், மீட்புக் குழுவினர் சாமர்த்தியமாக செயல்பட்டு, உடனடியாக லாரியை இயக்கி பாலத்தில் இருந்து மீட்டனர். இதனால், அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →