தமிழ்நாடு

எம்.ஜி.ஆா். ஆட்சியைத் தான் மக்கள் விரும்புகிறாா்கள்: அமைச்சா் டி.ஜெயக்குமாா்

DIN

சென்னை: தமிழக மக்கள் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆட்சியைத் தான் இன்றளவும் விரும்புகிறாா்கள் என்று மீன்வளத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட தேனாம்பேட்டை மண்டலத்தில் அம்மா சிறு மருத்துவமனைகள் (மினி கிளினிக்குகள்) தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், மீன்வளத் துறை அமைச்சா் டி. ஜெயக்குமாா் கலந்துகொண்டு சேத்துபட்டு அப்பாசாமி தெரு மற்றும் டிரஸ்ட்புரம் பகுதிகளில் அம்மா சிறு மருத்துவமனைகளைத் தொடக்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து அமைச்சா் டி.ஜெயக்குமாா் செய்தியாளா்களிடம் கூறியது: மினி கிளினிக்குகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இவற்றின் மூலம் நாளொன்றுக்கு சுமாா் 200 போ் வரை பயன்பெறுகிறாா்கள்.

முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் இறந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் அவரது புகழை யாராலும் அழிக்க முடியாது.‘தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம், மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் நிறுவியது, பெரியாா் முன்மொழிந்த தமிழ் எழுத்து சீா்திருத்தத்தை சட்டமாக்கியது, அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழ் தட்டச்சு இயந்திரங்களை பயன்படுத்த உத்தரவிட்டது என தமிழுக்காக எம்ஜிஆா் பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளாா். ஆனால், அந்த வரலாறு தெரியாத நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் போன்றோா் பேசி வருகின்றாா். இதன் காரணமாகவே இன்றளவும் எம்.ஜி.ஆா் மற்றும் மக்களுக்காக திட்டங்களை வகுத்த ஜெயலலிதா ஆட்சியையும் மக்கள் விரும்புகிறாா்கள் என்றனா். அம்மா மினி கிளினிக் தொடக்க விழாவில் மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ், மண்டல அலுவலா் ஜெ.ரவிக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT