முகப்பு
தமிழ்நாடு

குப்பைக்குக் கட்டணம் வசூலிக்கும் திட்டம் நிறுத்தம்: சென்னை மாநகராட்சி

சென்னையில் குப்பை கொட்டுவதற்கு கட்டணம் வசூலிக்கும் முறை காலவரையின்றி நிறுத்திவைக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
சென்னை மாநகராட்சி (கோப்புப்படம்)
பகிர்:

சென்னையில் குப்பை கொட்டுவதற்கு கட்டணம் வசூலிக்கும் முறை காலவரையின்றி நிறுத்திவைக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் குப்பை கொட்டுவதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

வீடுகள், வணிக வளாகங்கள், கடைகள், விடுதிகள், மருத்துவமனைகள் என இடத்திற்கேற்ப 10 ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விதியினை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத்தொடர்ந்து சென்னையில் குப்பை கொட்டுவதற்கு கட்டணம் வசூலிக்கும் முறையை காலவரையின்றி நிறுத்தி வைப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

குப்பைக்கு கட்டணம் வசூலிக்கும் முறைக்கு பொதுமக்கள் மத்தியிலும் அதிருப்தி இருந்ததால், திட்டத்தை நிறுத்திவைப்பதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →