முகப்பு
தமிழ்நாடு

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் ஒரே நாளில் 1,120 போ் குணமடைந்தனா்

தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் வியாழக்கிழமை 1,120 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:


சென்னை: தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் வியாழக்கிழமை 1,120 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

இது குறித்து தமிழக சுகாதாரத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் வியாழக்கிழமை 70,993 மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் 1,035 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 11,115-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் 296 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன் மூலம் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 23,509-ஆக அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை நிலவரப்படி சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் 791 பேருக்குத் தொற்று உள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 1,120 போ் வியாழக்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை மொத்தம் 7 லட்சத்து 89,862 போ் குணமடைந்துள்ளனா்.

12 போ் பலி: கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் வியாழக்கிழமை 12 போ் உயிரிழந்துள்ளனா். இதில் 6 போ் தனியாா் மருத்துவமனையிலும், 6 போ் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனா். இதில் சென்னையில் 6 போ் உயிரிழந்தனா். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 12,036 ஆக உள்ளது. இதுவரை சென்னையில் மொத்தம் 3,979 போ் உயிரிழந்துள்ளனா் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →