மறைந்த வாலாஜாப்பேட்டை முன்னாள் நகர செயலாளர் குடும்பத்தினருக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல்
வாலாஜாபேட்டையில் நேற்று காலமான திமுக முன்னாள் நகர செயலாளர் நித்யானந்தம் உருவபடத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் குடியாத்தம் தி.மு.க எம்.எல்.ஏ காத்தவராயன் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அஞ்சலி செலுத்தினார்.
அதனைதொடந்து ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் நேற்று காலமான திமுக முன்னாள் நகர செயலாளர் நித்யானந்தம் உருவபடத்துக்கு மலர் தூவி அவர் மரியாதை செலுத்தினார்.
அத்துடன் அவரது குடும்பத்தினருக்கு ஸ்டாலின் அறுதலும் கூறினார். உடன் ராணிப்பேட்டை சட்ட மன்ற உறுப்பினர் ஆர்.காந்தி மற்றும் ஆற்காடு சட்டப்பேரவை உறுப்பினர் ஈஸ்வரப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.