தமிழ்நாடு

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக கன்னியாகுமரியில் மாபெரும் போராட்டம்

DIN

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் இணைந்து  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாணவர் அமைப்புகள், பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக நல அமைப்புகள் சார்பில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

இந்த சூழ்நிலையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில்  குடியுரிமைச் சட்டத்துக்கு  எதிராக கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT