FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

காவல் நண்பர்கள் குழுவை நிரந்தரமாக தடை செய்யக் கோரி காரைக்குடியில் ஏஐஒய்எப் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்து விளக்கு அருகில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின்(AIYF) சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

Updated On : 7 ஜூலை 2020, 4:17 pm IST
காரைக்குடி ஐந்து விளக்கு அருகில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின்(AIYF) சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்து விளக்கு அருகில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின்(AIYF) சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

ஆர்ப்பாட்டத்தில் சாத்தான்குளம் காவல் துறையின் அராஜகப் போக்கை கண்டித்தும், காவல் துறையில் உள்ள காவல் நண்பர்கள் குழு (பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ) தமிழகம் முழுவதும் கலைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். 

ஆர்பாட்டத்திற்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற சிவகங்கை மாவட்டச் செயலாளர் சிவாஜி காந்தி தலைமை வகித்தார். நகரச் செயலாளர் ரிச்சர்ட் அருண், துரை, விக்னேன், கென்னடி, முத்துவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments