முகப்பு
தமிழ்நாடு

கொடைக்கானலில் செல்லிடப்பேசி வாங்கித் தராததால் மாணவி தைலம் குடித்து தற்கொலை

கொடைக்கானல் அருகே செல்லிடப்பேசி வாங்கி தராத விரக்தியில் பள்ளி மாணவி தைலம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:58 PM
கொடைக்கானலில் மாணவி தைலம் குடித்து தற்கொலை
பகிர்:

கொடைக்கானல் அருகே செல்லிடப்பேசி வாங்கி தராத விரக்தியில் பள்ளி மாணவி தைலம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் சண்முகப்ரியா(16). இவர் அதே பகுதியிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 10−ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்று 11-ம் வகுப்பு சென்றுள்ளார்.

இந்த நிலையில் அரசு அறிவித்தபடி  பாடம் படிப்பதற்கு ஆன்லைன் மூலம் படிப்பதற்காக செல்லிடப்பேசி தேவைப்பட்டது. இதற்கு தனது பெற்றோரிடம் செல்லிடப்பேசி கேட்டுள்ளார்.

செல்லிடப்பேசி வாங்கித்தர இயலாததால் மனம் உடைந்த மாணவி சண்முகப்ரியா வீட்டிலிருந்த தடைப்பட்ட வின்டர்கிரீன் சிவப்பு தைலத்தைக் குடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்குச் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது குறித்து பன்னீர் செல்வம் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →