தமிழ்நாடு

திருச்சுழி: காரைக்குளம் கிராமத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

DIN


அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே காரைக்குளம் கிராமத்தில் சிஏசிஎல் எனும் அமைப்பு சார்பில் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்சுழி அருகே காரைக்குளம் கிராமத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்குக் காரைக்குளம் ஊராட்சியை உள்ளடக்கிய துலுக்கன்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் வாசுதேவன் முன்னிலை வகித்து தொடக்கி வைத்தார். 

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்புகளான ஆர் சி பி டி எஸ் ( திருச்சுழி) , சி.எம்.சி.ஜே ( திருச்சுழி), ஸ்பீச் (சிவகாசி மற்றும் திருச்சுழி). டெஸ்ட் மற்றும் நீட்ஸ் ( திருவில்லிபுத்தூர்). ஓடம் (நரிக்குடி), ஆகிய அமைப்புகள் ஒருங்கிணைந்து உருவான சிஏசிஎல் எனப்படும் குழந்தைகள் உழைப்பு எதிர்ப்புப் பிரச்சார அமைப்பு சார்பில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் அதன் ஒருங்கினைப்பாளர் கிராம மக்களிடையே பேசியதாவது, ஆள் கடத்தலுக்கு எதிரான உலக தினத்தை முன்னிட்டு இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது எனக் கூறிய அவர், சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் கணக்கீட்டின்படி உலகம் முழுவதும் 152 மில்லியன் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாக அவதிப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் மட்டும் 2011 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி 10.1 மில்லியன் குழந்தைத் தொழிலாள்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 

இந்தியாவில்  சிஏசிஎல் அமைப்பின் நோக்கமானது குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, குழந்தைத் திருமணம் மற்றும் குழந்தைகள் கடத்தல் ஆகியவற்றை ஒழிப்பதாகும். ஆகவே பெற்றோர்கள் சிஏசிஎல் அமைப்பிற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என அவர் பேசினார். மேலும் மேற்கூறிய குழந்தைகளுக்கு எதிரான பல பிரச்னைகள் மற்றும் குற்றங்களைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் பெற்றோர்களிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

SCROLL FOR NEXT