அசாமில் மூன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்!
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தது பற்றி..
இந்தியாஅசாமில் மூன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்!
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தது பற்றி..
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கமலாக்யா தே புரகயஸ்தா, சஷிகாந்த் தாஸ் மற்றும் பசந்தா தாஸ் ஆகிய மூவரும் அசாமில் ஆளும் பாஜகவில் இணைந்தனர்.
எம்எல்ஏக்கள் மூவரும் மாநில பாஜக தலைவர் திலீப் சைகியா, மத்திய அமைச்சர் பபித் மார்கெரிட்டா முன்னிலையில் நடைபெற்ற விழாவில் கட்சியில் சேர்க்கப்பட்டனர்.
முன்னதாக, அசாம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் பூபன் போரா பாஜகவில் இணைந்ததைத் தொடர்ந்து, இன்று மூவர் இணைந்துள்ளனர்.
126 உறுப்பினர்களைக் கொண்ட அசாம் சட்டப் பேரவைக்கு ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.
புரகாயஸ்தா கரிம்கஞ்ச் (வடக்கு) தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அதேநேரத்தில் சஷிகாந்தா மற்றும் பசந்தா ஆகியோர் முறையே ரஹா மற்றும் மங்கல்டோய்(எஸ்சி) தொகுதிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் ஆவார்கள்.
பாஜகவில் இணைந்த மற்ற இருவரும் முன்னாள் காங்கிரஸ் இணைச் செயலாளர் பர்ஷா பாப் கலிதா மற்றும் முன்னாள் திரிணமுல் காங்கிரஸ் பொது செயாளலர் கங்கன் நாத் ஆவர்.
முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு நெருக்கமானவர்கள் எனக் கூறப்படும் மூன்று எம்எல்ஏக்களும் கடந்த சில ஆண்டுகளாக பாஜகவை வெளிப்படையாக ஆதரித்து வந்தனர். சசிகாந்த் தாஸ் 2021இல் ஆளும் கட்சியின் கொள்கைகளுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தார்.
கடந்த பிப். 22ல் போரா பாஜகவில் இணைந்தார். அதே நேரத்தில் இரண்டு எம்எல்ஏக்கள் அப்துல் ரஷீத் மொண்டல் மற்றும் ஷெர்மன் அலி அகமது ஆகியோர் கடந்த மாதம் ராய்ஜோர் தளத்திற்கு மாறினார்.
ரஷீத் மொண்டல் மற்றும் அகமது இருவரும் கோல்பாரா (மேற்கு) மற்றும் பாக்பாரில் இருந்து மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.