அனைத்துத் துறைச் செயலாளர்களுடன் தலைமைச் செயலர் சண்முகம் ஆலோசனை!
தமிழகத்தில் அனைத்துத் துறைச் செயலாளர்களுடன் தலைமைச் செயலர் சண்முகம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் அனைத்துத் துறைச் செயலாளர்களுடன் தலைமைச் செயலர் சண்முகம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
நாடு முழுவதும் 5 ஆம் கட்டமாக ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும், நிலைமைக்கேற்ப பெரும்பாலான பகுதகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது.
இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் அனைத்துத் துறைச் செயலாளர்களுடன் தலைமைச் செயலர் சண்முகம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்று வருகிறது.