தமிழ்நாடு

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்புப் பேருந்து வசதி

DIN

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

கரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள், 15.06.2020 முதல் 25.06.2020 வரை நடைபெறும்  என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதேபோன்று 26.03.2020 அன்று நடைபெற இருந்த மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வு 16.06.2020 அன்றும், 24.03.2020 அன்று  நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு கரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக எழுதாத தேர்வர்களுக்கு மட்டும் 18.06.2020 அன்றும் நடைபெறவுள்ளன.

இதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. சிறப்பு பேருந்துகளில் ஆசிரியர்களும் பயணிக்கலாம் என்றும் மாணவர்கள் ஹால் டிக்கெட், அடையாள அட்டை ஆகியவற்றை நடத்துனரிடம் காண்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

முன்னதாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 50% பேருந்துகள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT