முகப்பு
தமிழ்நாடு

மேலூரில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்: 20 பேர் கைது

மேலூரில் கரோனா நிவாரணம் வழங்கக் கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம்  நடத்திய 20 பேர் கைது செய்தனர். 

Updated On : 9 ஜூன், 2020 at 2:40 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:16 PM

 
மேலூரில் கரோனா நிவாரணம் வழங்கக் கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம்  நடத்திய 20 பேர் கைது செய்தனர். 

கரோனா பரவல் பொது முடக்கம் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய மாநில அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும், நூறுநாள் வேலைத் திட்டம் இருநூறு நாட்களாக மாற்றவும், விவசாயத்துக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்க வேண்டும், விவசாயிகள் பயனடையும் வகையில் திட்டங்கள் அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். 

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மதுரை மாவட்டச் செயலாளர் பிரிவு காளிதாஸ் ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்தார். மேலூர் தாலுகா செயலாளர் கே.கண்ணன் கட்சி மெய்யர் முன்னிலை வகித்தனர். மேலூர் காவல்துறை 20 பேரைக் கைது செய்தனர். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.