தமிழ்நாடு

ஆறுமுகனேரி அருகே இளைஞர் ஆற்றில் தவறி விழுந்து பலி

DIN

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி அருகில் கொட்டமலைக்காடு பகுதியில் வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் பாலத்திலிருந்து ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். 

காயல்பட்டினம் சீதக்காதி நகரைச் சேர்ந்த பீர்முகம்மது மகன் வருசை முகம்மது.18 வயதான இவர் இங்குள்ள கார் சர்வீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இவர் வெள்ளிக்கிழமை மாலை நண்பர்களுடன் ஆறுமுகனேரி அருகிலுள்ள கொட்டமலைக்காடு பகுதியில் தாமிரபரணி ஆறும் கடலும் சேருமிடத்தில் உள்ள பாலம் மீது நின்று மீன் பிடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக வருசைமுகம்மது நிலைதடுமாறி ஆற்றில் விழுந்து விட்டார். ஆறும் கடலும் சேரும் பகுதி என்பதால் நீர் சுழற்சி காரணமாகத் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டார். இளைஞர்கள் மற்றும் தீயணைப்புத்துறையினரின் உதவியால் வருசைமுகம்மது உடல் மூன்று மணி நேரம் கழித்து மீட்கப்பட்டது. ஆறுமுகனேரி ஆய்வாளர் சாந்தி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோல்வி பயத்தில் நடுங்குகின்றனர் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

கடல் புறா!

எலி பேஸ்ட் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

மே 25 - ஆறாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 58 தொகுதிகள் யார் பக்கம்?

கேன்ஸ் திரைப்பட விழா: உயரிய விருதைப் பெற்றார் சந்தோஷ் சிவன்!

SCROLL FOR NEXT