தமிழ்நாடு

ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் இதுவரை ரூ. 14.10 கோடி அபராதம் வசூல்

DIN

தமிழகத்தில் ஊரடங்கை மீறி வழக்குகளில் இதுவரை ரூ. 14.10 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் அத்தியாவசியத் தேவையின்றி யாரும் வெளியே வரக்கூடாது என பொதுமக்களுக்கு காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருந்த நிலையிலும், பல்வேறு பகுதிகளில் வெளியில் சுற்றுவோரை கண்காணிக்கும் பணியில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 6,81,952 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், 6,31,260 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. 

மேலும், இதுவரை 4,98,193 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ.14.10 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லைஸ்தானத்தில் பெருமாள் கோயில் தேரோட்டம்

50 சதவீத மானியத்தில் வேளாண் இடுபொருள்கள்

பேராவூரணி நீதிமன்றத்துக்கு கட்டடம் கட்ட இடம்:  உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரித்து பாஜக நாடகம்: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

காவிரி ஒழுங்காற்று குழுத் தலைவரை மாற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT