தமிழ்நாடு

அரசியல் மாற்றம்: கட்சிக்கு ஒரு தலைமை; ஆட்சிக்கு ஒரு தலைமை- நடிகர் ரஜினிகாந்த் 

DIN


சென்னை: அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்பதை மக்கள் விரும்புவர் என நினைக்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

தனது அரசியல் திட்டம் குறித்து சென்னையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் தனது அரசியல் திட்டங்கள் குறித்து அறிவித்தார். அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த தான் மூன்று திட்டங்களை வைத்திருப்பதாகத் தெரிவித்தார்.

முதலில் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்பதுவே.

அதன்படி மூன்று திட்டங்களில் ஒன்று, கட்சியில் குறிப்பிட்ட அளவிலேயே தலைவர் பதவிகள். இரண்டாவது, அதிக அளவில் இளைஞர்களுக்கு வாய்ப்பு. மூன்றாவது ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு வாய்ப்பு அளிப்பேன் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

மேலும், கட்சியில் பதவிகள் நிரந்தரமாக இருக்காது. கட்சித் தலைமையில் ஆட்சித் தலைமையில் இருப்பவர்கள் எந்த வகையிலும் தலையிட மாட்டார்கள். நல்ல தலைவர்களைக் கொண்ட மாற்று அரசியலைக் கொண்டு வர விரும்புகிறேன் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

"என் வாக்கு, என் உரிமை": குஜராத்தில் வாக்களித்தார் ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT