முகப்பு
தமிழ்நாடு

ராணிப்பேட்டை வாரச் சந்தையில் பரபரப்பு

வாரச்சந்தை ரத்து அறிவிப்பு தெரியாததால் விவசாயிகள், வியாபாரிகள் ராணிப்பேட்டை வாரச் சந்தையில் வழக்கம் போல் கடை அமைத்து வியாபாரம் செய்ய துவங்கினார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:14 PM
பகிர்:

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்க எடுக்கப்பட்டு வரும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை ஆலோசனை நடைபெற்றது. 

கூட்டத்துக்குப் பிறகு, தமிழகத்தில் உள்ள வாரச் சந்தைகள் அனைத்தும் வரும் மாா்ச் 31 வரை மூடப்பட வேண்டும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வாரச்சந்தை ரத்து அறிவிப்பு தெரியாததால் விவசாயிகள், வியாபாரிகள் ராணிப்பேட்டை வாரச் சந்தையில் வழக்கம் போல் கடை அமைத்து வியாபாரம் செய்ய துவங்கினார். 

இதையறிந்த நகராட்சி அதிகாரிகள், போலீசாருடன் விரைந்து வந்து கடைகளை மூட உத்தரவிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →