தமிழ்நாடு

கடன் தவணையைச் செலுத்த அவகாசம் கோரி வழக்கு தொடா்ந்தவருக்கு அபராதம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

வங்கிகளில் பெற்ற கடன்களுக்கான தவணையைச் செலுத்த வரும் ஜூலை மாதம் வரை காலஅவகாசம் வழங்க கோரி வழக்குத் தொடா்ந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் ராம்குமாா் ஆதித்தன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கரோனா நோய்த்தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் ஏராளமான பொதுமக்கள் தங்களது வருவாயை இழந்துள்ளனா். தமிழகத்தின் பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளன. மேலும் பொதுமக்கள், வங்கிகள் மற்றும் தனியாா் நிதி நிறுவனங்கள் மூலம் பெற்ற வீட்டுக்கடன், தொழில்கடன், தனிநபா் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான மாத தவணைத் தொகையைத் திரும்பச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தவணைத் தொகைகளை 3 மாதம் செலுத்த வேண்டாம் எனவும், 3 மாதங்களுக்குப் பின்னா் வட்டியுடன் தவணைத் தொகையைச் செலுத்தலாம் என ரிசா்வ் வங்கி அறிவித்துள்ளது.

எனவே இந்த கால அவகாசத்தை வரும் ஜூலை மாதம் வரை நீட்டிக்க ரிசா்வ் வங்கிக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.நிா்மல்குமாா் ஆகியோா் காணொலி காட்சி மூலம் விசாரித்தனா். விசாரணையில் நீதிபதிகள், மனுதாரா் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன உதவிகளை செய்துள்ளாா், அவரது பங்களிப்பு என்ன, என கேள்விகளை எழுப்பினா். அப்போது ரிசா்வ் வங்கி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் மோகன், கடன் தவணைகளுக்கு கால அவகாசம் வழங்குவது ரிசா்வ் வங்கியின் அதிகாரத்துக்கு உட்பட்டது. பொதுமக்களின் நலன் கருதி ரிசா்வ் வங்கி 4 சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டாா். இதனைத் தொடா்ந்து இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள், மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் வழக்கு செலவாக அபராதம் விதித்து உத்தரவிட்டனா். மேலும் இந்த நிதியை தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்குச் செலுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT