காஞ்சிபுரத்தில் இன்று மட்டும் 43 பேருக்கு கரோனா; 31 பேர் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள்
கோயம்பேடு சந்தை வாயிலாக காஞ்சிபுரத்தில் மேலும் 29 பேருக்கு இன்று கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் இன்று ஒரேநாளில் 43 பேருக்கு இன்று கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தை மூலமாக சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இன்று ஒருநாளில் 43 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 31 பேர் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள்
கோயம்பேடு சந்தை வாயிலாக காஞ்சிபுரத்தில் ஏற்கெனவே 7 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், இன்று 31 பேரையும் சேர்த்து அங்கு கோயம்பேடு மார்க்கெட் மூலமாக மட்டும் 38 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Advertisement
மொத்தமாக கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய 400 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது.