சீர்காழியில் 300 குடும்பங்களுக்கு கரோனா நிவாரண உதவி வழங்கல்
சீர்காழியை அடுத்த காத்திருப்பு கிராமத்தில் பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள 300 குடும்பங்களுக்கு கரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது.
சீர்காழியை அடுத்த காத்திருப்பு கிராமத்தில் பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள 300 குடும்பங்களுக்கு கரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது.
சமூக இடைவெளியோடு, 5 கிலோ அரிசி, காய்கறி தொகுப்பை காத்திருப்பு மீட்பர் சபை போதகர் இரா.புனிதவதி மற்றும் காவல்துறை ஆய்வாளர்கள் மணிமாறன், சதீஷ் ஆகியோர் வழங்கினர்.
அப்போது பாக்கியராஜ், மனோகர், நடராஜன், மாறன், கலையழகன், செல்வகுமார், முத்துக்குமார், எல்ஷடாய் உத்திராபதி மற்றும் பலர் உடன் இருந்தனர்.