முகப்பு
தமிழ்நாடு

சிதம்பரம் அருகே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் மாயம்

சிதம்பரம் அருகே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் விழுந்து மாயமானார்.

Updated On : 31 மே, 2020 at 5:33 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:13 PM

சிதம்பரம் அருகே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் விழுந்து மாயமானார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளை மீனவர் காலனியைச் சேர்ந்த மீனவர்கள் மூவர் படகில் சனிக்கிழமை இரவு படகில் சென்று ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது ஆழ்கடலில் அதிகாலை 4 மணிக்கு வலை வீசும் காற்றில் படகில் இருந்த மீனவ வாலிபர் செங்குட்டுவன் மகன் வசீகரன் (18) என்பவர் கடலில் தவறி விழுந்து மாயமானார். கரைக்கு மீண்டு வந்த மற்ற இருவர் அளித்த தகவலில் பேரில் கிள்ளை போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் மாயமான வாலிபரை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.