முகப்பு
தமிழ்நாடு

தீபாவளிக்குப் பிந்தைய சிறப்புப் பேருந்துகள் இன்றுமுதல் இயக்கம்

தமிழகத்தில் தீபாவளிக்குப் பிந்தைய சிறப்புப் பேருந்துகள் இன்று இரவு முதல் இயக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:52 PM
கோப்புப்படம்.
பகிர்:

தமிழகத்தில் தீபாவளிக்குப் பிந்தைய சிறப்புப் பேருந்துகள் இன்று இரவு முதல் இயக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. மேலும் அந்தந்த மாவட்டங்களிலிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

விரைவுப் பேருந்துகளில் பயணிப்பதற்கான முன்பதிவு, கடந்த மாதம் தொடங்கியது. 

இந்நிலையில், ஏற்கெனவே அரசு அறிவித்தபடி சிறப்புப் பேருந்துகள் உள்பட 3,125 பேருந்துகள், திங்கள் கிழமை நள்ளிரவு முதல் இயங்கத் தொடங்கின. 

சென்னையைப் பொருத்தவரை, கே.கே.நகா், மெப்ஸ், கோயம்பேடு, மாதவரம், தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி பேருந்து நிலையம் உள்ளிட்டவற்றில் இருந்து வெவ்வேறு பகுதிகளுக்குப் பேருந்துகள் இயக்கப்பட்டன. 

இந்நிலையில் தீபாவளிக்குப் பிந்தைய சிறப்புப் பேருந்துகள் இன்று இரவு முதல் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்காக சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள், பணிபுரியும் ஊர்களுக்குத் திரும்புவதற்காக வரும் புதன்கிழமை வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

புதன்கிழமை வரை, 4 நாள்களுக்கு 8,026 சிறப்பு பேருந்துகள் உள்பட 16,026 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →