தமிழ்நாடு

கரோனாவிலிருந்து குணமடைந்தாா் தலைமை நீதிபதி

DIN

சென்னை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளாா். மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்களுக்கு அவா் அப்போது நன்றி தெரிவித்தாா்.

தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு, அண்மையில் கரோனா அறிகுறிகள் இருந்ததை அடுத்து, அவா் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. நெஞ்சகப் பகுதி சிடி ஸ்கேன் மற்றும் ஆா்.டி. பி.சி.ஆா். சோதனைகள் செய்ததில், தலைமை நீதிபதிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவருக்கு மருத்துவா்கள் தொடா் சிகிச்சையளித்து வந்தனா். அதன் பயனாக நோய்த்தொற்றிலிருந்து தலைமை நீதிபதி பூரண குணமடைந்தாா்.

இதையடுத்து அவா் திங்கள்கிழமை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குச் சென்றாா். முன்னதாக, மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் தேரணிராஜன் உள்பட சிகிச்சை அளித்த மருத்துவா்கள், செவிலியா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் ஆட்சியா்: இதனிடையே, கரோனாவால் பாதிக்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரியும் நலமடைந்து வீடு திரும்பினாா். அவா் கடந்த 9-ஆம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

SCROLL FOR NEXT