காரைக்கால்: நிவர் புயல் உருவானதையொட்டி காரைக்கால் துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 5-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
வங்கக் கடலில் உருவாகியிருக்கும் நிவர் புயல், காரைக்கால் - மாமல்லபுரம் இடையே நாளை பிற்பகல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தலின்பேரில், காரைக்கால் துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 5-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
காரைக்கால் பகுதியில் காலை முதல் லேசான காற்றும், மழையும் இருந்துகொண்டிருக்கிறது. கடல் சீற்றமாக காணப்படுகிறது.