தமிழ்நாடு

காரைக்கால் துறைமுகத்தில் 5-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் 

DIN


காரைக்கால்:  நிவர் புயல் உருவானதையொட்டி காரைக்கால் துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 5-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் நிவர் புயல், காரைக்கால் - மாமல்லபுரம் இடையே நாளை பிற்பகல்  கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தலின்பேரில்,  காரைக்கால் துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 5-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

காரைக்கால் பகுதியில் காலை முதல் லேசான காற்றும், மழையும் இருந்துகொண்டிருக்கிறது. கடல் சீற்றமாக காணப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT