புதுச்சேரி பழைய துறைமுகத்தில் 7-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
நிவர் புயல் உருவானதையொட்டி புதுச்சேரி பழைய துறைமுக வளாத்தில் செவ்வாய்க்கிழமை காலை 7-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
புதுச்சேரி: நிவர் புயல் உருவானதையொட்டி புதுச்சேரி பழைய துறைமுக வளாத்தில் செவ்வாய்க்கிழமை காலை 7-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
வங்கக் கடலில் உருவாகியிருக்கும் நிவர் புயல், காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதன்கிழமை பிற்பகல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையொட்டி, புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 7-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் லேசான மழை பொழிந்து கொண்டிருக்கிறது. கடல் சீற்றமாக காணப்படுகிறது.