நாகை துறைமுகத்தில் 5-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
நிவர் புயல் எச்சரிக்கையாக, நாகை துறைமுக அலுவலகத்தில் 5 -ஆம் எண் புயல் கூண்டு செவ்வாய்க்கிழமை காலை ஏற்றப்பட்டது.
நாகப்பட்டினம்: நிவர் புயல் எச்சரிக்கையாக, நாகை துறைமுக அலுவலகத்தில் 5 -ஆம் எண் புயல் கூண்டு செவ்வாய்க்கிழமை காலை ஏற்றப்பட்டது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் காரைக்கால் மற்றும் மாமல்லபுரத்துக்கு இடையே நவ.25- ஆம்தேதி பிற்பகல் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், நாகை துறைமுக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 5-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்றுள்ள மீனவர்களை கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.