தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை; ஆந்திரத்துக்கு சிவப்பு எச்சரிக்கை
நிவர் புயல் கரையைக் கடந்து தமிழகத்தின் வட மாவட்டங்களில் நகர்ந்து சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், ஆந்திரத்தின் கடலோர மாவட்டங்களுக்கும், ராயலசீமாவுக்கு சிவப்பு எச்சர
சென்னை: நிவர் புயல் கரையைக் கடந்து தமிழகத்தின் வட மாவட்டங்களில் நகர்ந்து சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், ஆந்திரத்தின் கடலோர மாவட்டங்களுக்கும், ராயலசீமாவுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் கரையைக் கடந்து தரைப் பகுதியில் நகர்ந்து சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தின் வட உள் மாவட்டங்களான ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் அதி தீவிர கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே.. நிவர் புயலுக்கு இணையாக சுட்டுரையில் வீசிய மற்றொரு ஹிந்தி புயல்
அதே வேளையில், ஆந்திரத்தின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிகக் கனமழையும், அதி கனமழைக்கும் வாய்ப்பிருப்பதாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதே நிலையில் ராயலசீமா பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.