முகப்பு
தமிழ்நாடு

அருப்புக்கோட்டையில் கனமழை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்குத் தொடர்ந்து முக்கால் மணி நேரம் கனமழை பெய்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:35 PM
அருப்புக்கோட்டையில் வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்குப் பெய்த கனமழைக்கு தெற்குத் தெரு பகுதியில் பெருகி ஓடும் மழை நீர் .
பகிர்:

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்குத் தொடர்ந்து முக்கால் மணி நேரம் கனமழை பெய்தது.

அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பகல் வேளையில் கடும் வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து, மாலை சுமார் 3 மணி முதல் தொடர்ந்து சுமார் முக்கால் மணி நேரம் கனமழை பெய்தது. அப்போது சாலைகளில் மழை நீர் திரண்டு வெள்ளமென ஓடியது. அன்று மாலை 4 மணி நிலவரப்படி தொடர்ந்து மிதமான மழை பெய்த வண்ணம் இருந்தது. இம்மழையால் இதமான காற்றுடன் குளிர்ந்த தட்பவெப்பம் நிலவியது.

முழு கட்டுரையைப் படிக்க →