சீர்காழி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நள்ளிரவு வரை விசாரணை: 4 பேர் மீது வழக்குப் பதிவு
சீர்காழி சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று நள்ளிரவு வரை லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் திடீர் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூ.38ஆயிரத்து 650கைப்பற்றி 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்
தமிழ்நாடுசீர்காழி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நள்ளிரவு வரை விசாரணை: 4 பேர் மீது வழக்குப் பதிவு
சீர்காழி சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று நள்ளிரவு வரை லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் திடீர் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூ.38ஆயிரத்து 650கைப்பற்றி 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்
சீர்காழி: சீர்காழி சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று நள்ளிரவு வரை லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் திடீர் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூ.38ஆயிரத்து 650கைப்பற்றி 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்
நாகை மாவட்டம் சீர்காழி பத்திரப்பதிவு அலுவலகத்தில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பத்திர ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பத்திரம் பதிவு செய்ய வருபவரிடம் பத்திரப்பதிவு சிலர் லஞ்சம் பெறுவதாக மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்களுக்கு புகார் வந்ததன் அடிப்படையில் புதன்கிழமை இரவு 6 மணி முதல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன் தலைமையில், லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர்கள் ரமேஷ்குமார், அருள் பிரியா தலைமையில் 8 காவல்ரகள் திடீரென சீர்காழி பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வந்தனர். தொடர்ந்து நுழைவாயிலை பூட்டிவிட்டு யாரையும் உள்ளே செல்லவும், உள்ளே இருப்பவர்கள் வெளியேறவும் அனுமதி மறுத்து 5 மணி நேரத்திற்கு மேலாக ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது கணக்கில் வராத ரூ 38 ஆயிரத்து 650 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது . மீதமிருந்த ரூ. 51 ஆயிரத்து 100க்கு கணக்கு தாக்கல் செய்யப்பட்டதால் அலுவலகத்திலேயே ஒப்படைக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு அவண எழுத்தர்கள் வல்லவன், பால குரு, ரவிச்சந்திரன், கணேசன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊழல் மற்றும் லஞ்சம் தொடர்பான புகார்களை லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் 9788994343 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றார். புகார் தெரிவிப்பவர்கள் ரகசியம் வெளியில் கூறப்படாது எனவும் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.