தமிழ்நாடு

அண்ணா பல்கலை. விவகாரம்: போடியில் திமுக ஆர்பாட்டம்

DIN

போடி: அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பதைக் கண்டித்து போடியில் மாவட்ட திமுக மாணவரணி சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி வடக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போடி அரசு பொறியியல் கல்லூரி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கத் தமிழ்செல்வன் தலைமை வகித்தார். தேனி மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் பாஸ்கரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஸ்டீபன், போடி சட்டப்பேரவை தொகுதி முன்னாள் உறுப்பினர் எஸ்.லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கக் கூடாது, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை மாற்ற வேண்டும், அண்ணா பல்கலை.யில் மாற்றம் செய்ய முயலும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்டத்தில் பல்வேறு ஊர்களிலிருந்தும் திமுக தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT