முகப்பு
தமிழ்நாடு

மருதூர் கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கும் பணி தொடக்கம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த  மருதூர் தெற்கு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு  பயிர்க் கடன் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:42 PM
விவசாயி ஒருவருக்கு வழங்கப்பட்ட பயிர்க் கடன் தொகை.
பகிர்:

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த மருதூர் தெற்கு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

மருதூர் தெற்கு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளுக்கு முதல்கட்டமாக  226 பேருக்கு நிகழ் பருவக்கால நெற்பயிர் சாகுபடிக்கு ரூ. 64 லட்சம் பயிர்க் கடன் வழங்கப்படுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்கத்தின் துணைத் தலைவர் மு.செந்தில்குமார் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில், கூட்டுறவு வங்கிச் செயலர் எஸ்.சேகர், கூடுதல் செயலர் அசோகன், இயக்குநர்கள் உதயம்.முருகையன், இந்திராணி சுப்ரமணியன், சா.இந்திரா, ப.சிங்காரவேல், கோபு, பிச்சக்கண்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →