முகப்பு
பிளஸ்1, பிளஸ் 2வில் மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியீடு
தமிழ்நாடு

பிளஸ்1, பிளஸ் 2 தேர்வுக்கான மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியீடு

கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட மேல்நிலை முதலாமாண்டு (பிளஸ் 1) / இரண்டாமாண்டு (பிளஸ் 2) பொதுத் தேர்வுகளில் பங்கேற்று, மறுமதிப்பீடு / மறுகூட்டல் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுக

தமிழ்நாடு

பிளஸ்1, பிளஸ் 2 தேர்வுக்கான மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியீடு

கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட மேல்நிலை முதலாமாண்டு (பிளஸ் 1) / இரண்டாமாண்டு (பிளஸ் 2) பொதுத் தேர்வுகளில் பங்கேற்று, மறுமதிப்பீடு / மறுகூட்டல் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுக

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:16 PM
பிளஸ்1, பிளஸ் 2வில் மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியீடு
பகிர்:

சென்னை: கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட மேல்நிலை முதலாமாண்டு (பிளஸ் 1) / இரண்டாமாண்டு (பிளஸ் 2) பொதுத் தேர்வுகளில் பங்கேற்று, மறுமதிப்பீடு / மறுகூட்டல் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், மார்ச் 2020-ல் நடைபெற்ற மேல்நிலை முதலாமாண்டு (பிளஸ் 1) / இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதி அதில் மறுகூட்டல் (ரீ-டோட்டல்) மற்றும் மறுமதிப்பீடு (ரீவேல்யூஷன்) கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் (நோட்டீஃபிகேஷன் பக்கத்தில்) 08.09.2020 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. 

இப்பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும் உடன் மேற்கண்ட இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →