கண்தானம் செய்ய முதல்வர் பழனிசாமி உறுதிமொழி: தமிழிசை பாராட்டு
கண் தானம் செய்வதாகக் கூறிய தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடுகண்தானம் செய்ய முதல்வர் பழனிசாமி உறுதிமொழி: தமிழிசை பாராட்டு
கண் தானம் செய்வதாகக் கூறிய தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை: கண் தானம் செய்வதாகக் கூறிய தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கண் தானத்தை ஊக்குவிக்கும் வண்ணம் எனது கண்களை தானம் செய்ய உள்ளேன் ” என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் கண் தானம் செய்ய உறுதி பத்திரத்தில் கையெழுத்திட்டு இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.
முதலமைச்சரின் இச்செயலால் பொது மக்களும் தானாக முன்வந்து தங்களது கண்களை தானம் செய்வர். இதனால் லட்ச கணக்கான பார்வையில்லாதவர்கள் பயன் பெறுவர்.
கண் தானம் செய்வதால் வெளிச்சம் இல்லாதவர்களின் வாழ்க்கையில் நாம் ஒளி ஏற்றலாம். எனவே அனைவரும் கண் தானம் செய்ய முன் வர வேண்டும் என்று தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.