முகப்பு
தமிழ்நாடு

கும்பகோணம் ஆதிகும்பேசுவரர் கோயிலில் தேரோட்டம்: திரளானோர் பங்கேற்பு

மாசிமகத்தையொட்டி கும்பகோணத்தில் ஆதிகும்பேசுவரர் கோயிலில் தேரோட்டத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:06 PM
பகிர்:

மாசிமகத்தையொட்டி கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேசுவரர் திருக்கோயிலில் தேரோட்டத் திருவிழா இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஆண்டுதோறும் இக்கோயிலில் மாசி மாதத்தில் தேரோட்டத் திருவிழா விமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்தாண்டுக்கான மாசிமக விழா பிப்ரவரி 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேரோட்டமும், காலை 8.30 மணிக்கு சுவாமி, அம்பாள் தேரோட்டமும் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு இத்தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.

Advertisement

இதைத் தொடர்ந்து நாளை (7-ம் தேதி) இரவு சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெறுகிறது. வருகிற 8-ம் தேதி காலை 9 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் உள்ளிட்ட பஞ்சமூர்த்தி சுவாமிகள் விதி உலா, மகாமக குளக்கரையில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. காலை 10.15 மணி முதல் 11.45 மணி வரை மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments